மாணவர்களுக்கு:
(நான் தேர்வு எழுதிய காலங்களில், தேர்வு அறையை விட்டு வெளியே வந்த போது, எப்படி தேர்வு எழுதினோம் என்று விவாதிக்கவில்லை, மாறாக “மச்சி, உன் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஃபிகர் சூப்பர்டா!, ஆமா! அவ ரொம்ப அழகா இருந்தா, சான்ஸே இல்ல!” என்று தான் பேசிக்கொண்டிருந்தோம்)
பெற்றோர்களுக்கு:
இந்த நபர்கள் இல்லை என்றால், நம் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?? "எடிசன் இல்லாமல் நம் வாழ்க்கை எப்போதும் இருண்டதாக இருந்திருக்கும். ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் இல்லை ஐ-போன்கள். பில் கேட்ஸ் இல்லாமல், கணிப்பொறி என்பது தூரத்து கனவாக இருந்திருக்கும். சச்சின் இல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாறு இல்லை" என பட்டியலில் நீள்கிறது.....
என் அன்பு நண்பர்களுக்கு:
இந்த விஷயத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் 9941265431/9362994035 என்ற எண்களில் பேசலாம். நீங்கள் kannappanramanathan@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
எப்போதும் "வாழ்க்கை அழகானது" என்று சொல்வேன். வாழ்வில் நடப்பவைகளை ஏற்றுக்கொண்டு, சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருப்போம்!
அன்புடன்,
கண்ணப்பன்
- போட்டு பெரிதாய் அலட்டிக் கொள்ளாதீர்கள். அமைதியாக, ரிலாக்ஸ்-ஆக இருங்கள்.
- ஆறு முதல் எட்டு மணி நேரம் தினமும் தூங்குவது அவசியம். அப்படி உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுத்தால் மட்டுமே, நீங்கள் படிப்பதையெல்லாம், உங்களால் நினைவுபடுத்தி, தேர்வில் எழுத முடியும்
- 5 முதல் 10 நிமிடங்கள் ஒவ்வொரு ஒரு மணி நேரம் ஒரு இடைவேளை எடுத்துக்க்கொள்ளுங்கள். நம் மூளையால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது. எனவே இடைவெளிகள் மிகவும் இன்றியமையாதவை.
- எவ்வளவு படிக்கமுடியுமோ, அந்த அளவு மட்டுமே படியுங்கள். மிகவும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
- கல்வியின் அதிமுக்கிய நோக்கம் என்னவென்றால், நீங்கள் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொள்வது தான். மதிப்பெண்கள் பெறுவது மட்டும்ல்ல. இந்த விஷயத்தை என் வாழ்வில், மிக தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டேன். இப்பொழுதாவது உணர்ந்து கொண்டேனே! எதுவும் தாமதம் கிடையாது அன்றோ!
- உங்கள் நண்பர்களை எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்று கேட்காதீர்கள். அப்படி கேட்பது, தேர்வுக்கு முன் தேவையற்ற கவலை/பயத்திற்கு வழிவகுக்கும்.
- நீங்கள் எடுக்கப்போகும் மதிப்பெண்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், படித்ததிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள் என்பது தான் முக்கியம். நீங்கள் நன்றாக புரிந்து படித்திருந்தால், மதிப்பெண்கள் தானாக வந்து தான் ஆக வேண்டும்.
- கேள்வித்தாளைப் பார்த்தவுடன் பயந்துவிட வேண்டாம். உங்களால், கேள்விக்கு சம்மந்தப்பட்டு என்ன எழுத முடியுமோ, அதை எழுதுங்கள்.
- தேர்வு அறையை விட்டு வெளியே வந்த பிறகு, பதில்களை பற்றி விவாதிக்க வேண்டாம், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்; அடுதது வரும் தேர்வுகளுக்கு நன்கு தயார் செய்ய முடியாமல் போகலாம்.
(நான் தேர்வு எழுதிய காலங்களில், தேர்வு அறையை விட்டு வெளியே வந்த போது, எப்படி தேர்வு எழுதினோம் என்று விவாதிக்கவில்லை, மாறாக “மச்சி, உன் பக்கத்துல உட்கார்ந்திருந்த ஃபிகர் சூப்பர்டா!, ஆமா! அவ ரொம்ப அழகா இருந்தா, சான்ஸே இல்ல!” என்று தான் பேசிக்கொண்டிருந்தோம்)
பெற்றோர்களுக்கு:
- மற்றவர்களுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட வேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர் தங்கள் சொந்த வழிகளில் திறமையானவர்கள். சிலரால் நன்றாக படிக்க முடியும்., சிலரால் நன்றாக விளையாட முடியும். சிலரால் நன்றாக பாடமுடியும்.சிலரால் நன்றாக ஆட முடியும். அனைத்து விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை ஆனால் ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது அல்லவா!
- நன்றாக படிக்க அவர்களுக்கு உதவுங்கள். படி படி என்று சொல்லி மன அழுத்தம் கொடுக்காதீர்கள்.
- ”நீ ஒன்றுக்கும் உதவாதவன்/ள்" என்றெல்லாம் சொல்லாதீர்கள். மாறாக, "உனக்கு திறமை உண்டு, இன்னும் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும், நிச்சயம் உன்னால் முடியும்” என்று ஊக்கம் கொடுங்கள்.
- தேர்வுக்கு பிறகு, ஒரு வேளை உங்கள் குழந்தைகள், பதற்றமாக இருந்தால் அவர்கள் அருகில் இருந்து, “ஒன்றும் பெரிதாய் நீ இழக்கவில்லை, எதற்கும் கவலைப்படாதே. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என்று ஆறுதல் கூறுங்கள்.
- குழந்தைகளுக்கு தற்கொலை/தற்காயப்படுத்தும் எண்ணங்கள், மனச்சோர்வு போன்றவை இருந்தால், அவர்களை தனியாக விட்டு செல்லாதீர்கள், மதிப்பெண்கள் என்பவை மட்டும் வாழ்க்கை இல்லை என்று புரிய வையுங்கள்.
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - ஒரு சராசரி மாணவர்.
- ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் இணை நிறுவனர், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்.
- சச்சின் டெண்டுல்கர் - தனது 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்
- பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் தலைவர், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்.
- தாமஸ் ஆல்வா எடிசன் - விஞ்ஞானி, பள்ளியிலிருந்து பாதியில் வெளிவேற்றப்பட்டவர்
- வின்ஸ்டன் சர்ச்சில் - பிரிட்டன் முன்னாள் பிரதமர், எழுத்தாளர் மற்றும் ஓவியர், தனது படிப்பில் சராசரிக்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்.
இந்த நபர்கள் இல்லை என்றால், நம் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?? "எடிசன் இல்லாமல் நம் வாழ்க்கை எப்போதும் இருண்டதாக இருந்திருக்கும். ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் இல்லை ஐ-போன்கள். பில் கேட்ஸ் இல்லாமல், கணிப்பொறி என்பது தூரத்து கனவாக இருந்திருக்கும். சச்சின் இல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் வெற்றி வரலாறு இல்லை" என பட்டியலில் நீள்கிறது.....
என் அன்பு நண்பர்களுக்கு:
- நம் அகராதியிலிருந்து ‘தற்கொலை’ என்ற வார்த்தையை நீக்க போராடுவோம். மனச்சோர்வில் இருப்பவர்களுக்கு தேவை ”சொல்வதை பொறுமையுடன் கேட்க காதுகளும், ஆறுதல் தரும் மனிதர்களும்” தான்.
- நமக்கு தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமுன் இந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வோம். அறிவுரைகள் சொல்லப்படுவதை விட எழுதப்படுவது நல்லது என்று நான் நினைக்கிறேன். எழுத்து வடிவில் இருந்தால், எந்த ஒரு கருத்துச்சிதறலுமின்றி, நேரடியாக படிப்பவர்களை சென்று அடையும். இதனை பகிர்ந்து கொள்வதன் மூலம் நிச்சயமாக சிலரின் வாழ்வை நம்மால் காப்பாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.
- "மாணவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று தலைப்பு செய்தி வந்துவிடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம். கஷ்டப்பட ஒரு காரணம் இருந்தால், சிரிக்க/சந்தோஷப்பட ஆயிரம் காரணங்களை இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் பிறந்த போது, எதையும் கொண்டுவரவில்லை, ஆகவே இழப்பதற்கென்று ஒன்றும் இல்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் 9941265431/9362994035 என்ற எண்களில் பேசலாம். நீங்கள் kannappanramanathan@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
எப்போதும் "வாழ்க்கை அழகானது" என்று சொல்வேன். வாழ்வில் நடப்பவைகளை ஏற்றுக்கொண்டு, சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருப்போம்!
அன்புடன்,
கண்ணப்பன்
No comments:
Post a Comment